ad

சிலாங்கூரில் உள்ள 2 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

19 நவம்பர் 2025, 1:43 AM
சிலாங்கூரில் உள்ள 2 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், நவ 19 - இன்று நண்பகல் 1 மணி வரை சிலாங்கூரில் உள்ள 2 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலைதான் பேராக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.