மைத்துனரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஆறு நாள் ரிமாண்ட்

2 நவம்பர் 2025, 1:32 AM
மைத்துனரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஆறு நாள் ரிமாண்ட்

அலோர் ஸ்டார் நவம்பர் 2 — ஜெர்லுன், பிடா 3 கிராமத்தில் நேற்று தனது மைத்துனரை வெட்டி கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் ஆறு நாட்கள் ரிமாண்டில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முஹமட் ரட்சி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் தாக்கத்திலில்லையென உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் உடல் அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரவு ஏற்பட்ட சண்டையில் மைத்துனர் மீது கொலைத் தாக்குதல் நடத்தியதில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடலில் பல வெட்டுக் காயங்கள் மற்றும் தலை உடலிலிருந்து சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.