சிங்கப்பூர், அக் 29 - நேற்று சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் (Marina Bay Sands) தீ விபத்து ஏற்பட்டது.
அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு பிளாஸ்டிக் பாய் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் அரசாங்கத்தின் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு தற்காப்புப் படை பணியாளர்கள் வருவதற்கு முன்பு ஊழியர் ஒருவரால் தீ அணைக்கப்பட்டதாக மெரினா பே சாண்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களால் அணுக முடியாத இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதோடு, சிங்கப்பூர் தற்காப்பு படை உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாகவே விரைவாக தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.




