பிலிப்பைன்ஸ், அக் 2 - மத்திய பிலிப்பைன்ஸ்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6.9ஆக பதிவாகியது. இந்நிலநடுக்கத்தில் 140க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் அவர்களுக்கு உதவ அந்நாட்டு அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களை மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
செபு மாநிலத்தின் வடக்கே உள்ள போகோ நகர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கே உள்ள மருத்துவமனைகளில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸ்சில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான செபு மாநிலத்தின் 34 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா