ad

சபாவில் பேரிடருக்கு பிந்தைய உதவிகளை வழங்க சிலாங்கூர் தயார்

19 செப்டெம்பர் 2025, 7:20 AM
சபாவில் பேரிடருக்கு பிந்தைய உதவிகளை வழங்க சிலாங்கூர் தயார்

உலு சிலாங்கூர், செப். 19 - சபா மாநிலத்திற்கு பேரிடருக்கு பிந்தைய உதவிகளை வழங்க சிலாங்கூர் தயாராக உள்ளது. எனினும் தன்னார்வலர்கள் மற்றும் தேவைப்படும இதர உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அம்மாநிலத்தின் நிலைமையை அது கண்காணித்து வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட வேளையில் எத்தகைய உதவிகள் வழங்கப்படும் என்ற தகவல் கூடியவிரைவில் வழங்கப்படும் என்று மந்திரி பு சார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கூட்டரசு அரசாங்கம் தனது பணிகளை நிறைவு செய்யும்வரை நாங்கள் காத்திருக்க விரும்புகிறோம். இப்போது, சீருடைப் அமைப்புகள் மற்றும் அதிகார தரப்பினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தேவையின் அடிப்படையில் மாநில அரசு உதவிகளை வழங்கும். எனினும், அம்மாநிலத்திற்குச் செல்ல விமானச் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் செலவுகள் அதிகரிக்கும்.

அதோடு கனரக வாகனங்களையும் கொண்டுச் செல்ல இயலாது என அவர் குறிப்பிட்டார். இருப்பினும் தன்னார்வலர்கள் மற்றும் எங்களால் இயன்ற இதர உதவிகளை வழங்க முயன்று வருகிறோம் என்று இன்று இங்கு நடைபெற்ற சுங்கை புவாயா முன்னாள் பெல்டா குடியேற்றவாசிகளுக்கான இறுதி கட்ட நிதியளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பேரிடரில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்பினரின் நன்கொடை மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பங்கிட் சிலாங்கூர் நிதியின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.

வெள்ளம் காரணமாக சபா மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 964 குடும்பங்களைச் சேர்ந்த 3,325 பேர் 27 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

இம்மாநிலத்தில் நிலச்சரிவுகள் காரணமாக 13 பேர் உயிரிழந்த வேளையில் வெள்ளத்திற்கு ஒருவர் பலியானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.