விபத்துக்குப் பின்  கைகலப்பு- நால்வர் கைது, மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

16 ஆகஸ்ட் 2025, 8:18 AM
விபத்துக்குப் பின்  கைகலப்பு- நால்வர் கைது, மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜாசின், ஆக. 16-  இங்குள்ள ஜாசின்-பெம்பான் சாலையோரத்தில் நேற்று கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தடிகள் உள்ளிட்ட ஆயுதக்களை வைத்திருந்தனர்.

காலை 9.00  மணியளவில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட  சாலை விபத்துக்குப்  நிகழ்ந்த இச்சம்பவத்தில் 20 முதல் 57 வயதுடைய  ஏழு
ஆடவர்கள்  சம்பந்தப்பட்டதாக  மலாக்கா மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஜூல்ஹைரி முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம்  தொடர்பில்   பெம்பான் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறையினருக்கு  காலை 9.00 மணியளவில் ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது,

இந்த சம்பவத்தில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்ட வேளையில் ஏழு பேருக்கு இடையே சண்டை நடந்ததாக  நம்பப்படுகிறது.  வோக்ஸ்வேகன் பாஸாட், மிட்சுபிஷி ட்ரைடன் மற்றும் டொயோட்டா வியோஸ் ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன என்று
அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைகலப்புக்குப்  பிறகு ஐந்து சந்தேக நபர்களும்  மிட்சுபிஷி வாகனத்தை சாலையோரம் விட்டு விட்டு  வெள்ளி நிற புரோட்டோன் எகுஸோரா காரில் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில்  ஜாசின் மாவட்ட காவல் தலைமையகத்தில் மேலும் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக ஜூல்ஹைரி நேற்று தெரிவித்தார்.

20 வயதான சந்தேக நபருக்கு நான்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது. அனைத்து சந்தேக நபர்கள் மீதும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது என அவர் கூறினார்.

மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பது உட்பட மேல் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. பொது இடத்தில் கலவரம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின்  148வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.