பந்திங் கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்

23 ஆகஸ்ட் 2025, 1:51 PM
பந்திங் கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 23 - இன்று அதிகாலை பந்திங்  ஜாலான் சுல்தான் சுலைமான் ஷாவின் கம்போங் சோடோய் அருகே அவர்கள் பயணித்த கார் சறுக்கியதாக நம்பப்படுவதால் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் சூப்பர்ட் முகமது அக்மல்ரிஸல் ராட்ஸி கூறுகையில், அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்து, பந்தாய் மோரிபில் இருந்து தெலுக் பங்லிமா காராங் நோக்கிச் சென்ற சிவப்பு தொயோத்தா கொரோலா கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் கடந்து சறுக்கியதாக நம்பப்படுகிறது.

அதில் "16 முதல் 19 வயதுடைய இளைஞர்களை ஏற்றிச் சென்ற கார், பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதன் விளைவாக, 16 வயது டிரைவர் உட்பட மூன்று பாதிக்கப் பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர் மற்றும் பந்திங் மருத்துவமனையில் அவசர பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் இன்று காலை 11 மணியளவில் சிகிச்சையின் போது இறந்தார் "என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அக்மல்ரிஸால் மேலும் கூறினார்.பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் 012-6708561,03-31872222, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.