SELANGOR

சிலாங்கூர் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாவதில் கவனம் செலுத்தும்  

25 மே 2025, 3:58 AM
சிலாங்கூர் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாவதில் கவனம் செலுத்தும்   

சிப்பாங், மே 25: நாட்டில்  ஜனவரி 2026 க்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டத்திற்கு ஏற்ப , சிலாங்கூரில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும்  பிளாஸ்டிக்கிற்கான பயன்பாட்டு கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தை மாநில அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.

இந்த முயற்சி இன்னும் கலந்துரையாடல் கட்டத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எக்ஸ்கோ சுற்றுச்சூழல் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"இந்த விஷயத்தை சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு 20 சென்ட் கட்டணம் மிகக் குறைவு என்ற கருத்தை நாங்கள் பெற்றோம்".

"பினாங்கில் உள்ளதைப் போல கட்டணத்தை உயர்த்துவது உட்பட பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, இது மிகவும் படிப்படியாக செயல்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம்" என்று அவர் நேற்று இங்குள்ள பாகான்  லாலாங் கடற்கரையில் சிப்பாங் மாவட்ட பிளாஸ்டிக் இல்லாத பிரச்சாரம் 2025 ஐத் தொடங்கிய பின்னர் கூறினார்.

விரைவில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை செய்வதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது என்று ஜமாலியா மேலும் கூறினார்.

"இந்தக் கொள்கை உறுதி செய்யப்பட்டால், 50 சென்ட் அல்லது RM1 கட்டணம் விதிக்கப்பட்டாலும் வர்த்தகர்கள் அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தடை விதிக்கப்படும்" என்று அவர் விளக்கினார்.

ஜமாலியாவின் கூற்றுப்படி, 2010 முதல் மார்ச் 2025 வரை, பிளாஸ்டிக் பயன்பாட்டு கட்டணங்கள் மூலம் அனைத்து ஊராட்சி மன்றங்களில் இருந்தும் (பிபிடி) RM 22 மில்லியன் வெற்றிகரமாக வசூலித்துள்ளது என்றார்.

இந்தப் பொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை ஒழுங்கமைக்க இந்த சேகரிப்பு பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

"இந்த வசூல் குறையும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது தொடர்ந்து அதிகரித்தால், இன்னும் பலர் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்", என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சூழல் நட்பு பொருட்களால் செய்யப்பட்ட உணவு மற்றும் பான கொள்கலன்களை வழங்கக்கூடிய எந்த ஒரு தரப்பினரும் முன்வந்து இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜமாலியா வலியுறுத்தினார்.

சிலாங்கூரில் விரிவான பசுமை மாற்றத்திற்கான தொடக்க புள்ளியாக பிளாஸ்டிக் இல்லாத பிரச்சாரம் செயல்பட முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.