ஷா ஆலம், மே 7: புக்கிட் செந்தோசா மண்டலம் 4(2) இல் சட்டவிரோதமாகக் கழிவுகளை கொட்டிய இரண்டு லாரிகளை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் நேற்று பறிமுதல் செய்தது.
இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோதக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.
“சட்டவிரோதக் கழிவுகளை அகற்றுவதற்கான இடமாக அடையாளம் காணப்பட்ட ஜாலான் தெலிபோட் பகுதியில் ரோந்து சென்றபோது, இரண்டு லாரிகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில் கழிவுகளை கொட்டுவது கண்டறியப்பட்டது.
“இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்ததன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றுதல் துணைச் சட்டங்கள் (MDHS) 2007 இன் UUK (3) இன் விதிகளின் கீழ் குற்றமாகும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் வலியுறுத்தியது.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதே சட்டத்தின் UUK 21(1) இன் விதிகளின்படி மேல் நடவடிக்கைக்காக ராசாவில் உள்ள அமலாக்கத் தடுப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
“சட்டத்தை மீறுவதாகவும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டால் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.


