SELANGOR

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இலவச சிகிச்சை - SAFM

7 ஏப்ரல் 2025, 7:30 AM
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இலவச சிகிச்சை - SAFM
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இலவச சிகிச்சை - SAFM

ஷா ஆலம், ஏப்ரல் 7: புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மலேசியாவின் கைவிடப்பட்ட விலங்குகள் சங்கம் (SAFM) இலவச சிகிச்சை மற்றும் உணவை வழங்குகிறது.

காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட தெரு விலங்குகள் உள்ளிட்ட பிராணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுவதாக SAFM முகநூல் மூலம் அறிவித்தது.

“இந்த விலங்குகளின் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விலங்கு மருத்துவமனையிலும் பூனை மற்றும் நாய் உணவை SAFM வழங்கும்.

“காயமடைந்த விலங்குகளை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுவோம்,” என்று SAFM தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகளின் உரிமையாளர்கள் போக்குவரத்து உதவி அல்லது ஆதரவுக்காக 013-7066770 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.