SELANGOR

சிலாங்கூர் சுல்தான் மற்றும் ராணியார்  மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான விடுமுறையுடன் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையடன்  வாழ  பிரார்த்திப்பதாக வாழ்த்தினர்.

30 மார்ச் 2025, 5:20 PM
சிலாங்கூர் சுல்தான் மற்றும் ராணியார்  மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான விடுமுறையுடன் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையடன்  வாழ  பிரார்த்திப்பதாக வாழ்த்தினர்.

ஷா ஆலம், 30 மார்ச்;- சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் ராணி தெங்கு ஆகியோர் குறிப்பாக சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கும், பொதுவாக மலேசியாவிற்கும் புனித ஐடில்பித்ரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தொங்கு இளவரசி ஹஜா நோராஷிகின் ஆகியோர் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த நாளை உற்சாகமான, இணக்கமான மற்றும் ஒன்றுபட்ட சூழலில் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி மூலம், அத்தகைய பண்டிகைகளைக் கொண்டாடும் கலாச்சாரம் பல இன மக்களிடையே ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தும் என்றும் மாட்சிமை பொருந்தியவர் பிரார்த்தனை செய்தார்.

"இத்தகைய பண்டிகைகளைக் கொண்டாடும் கலாச்சாரம் ஒற்றுமையின் பிணைப்பை வலுப் படுத்தட்டும், அங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து மலேசியர்களும் முழு சகிப்புத் தன்மையுடனும் அமைதியுடனும் தொடர்ந்து வாழ" என்று அந்த செய்தியில் மேன்மைமிகு அரச தம்பதியினர் வாழ்த்தினர் .

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.