அம்பாங் ஜெயா, பிப் 10: நேற்று இரவு உலு கிளாங் தொகுதியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளின் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாமான் மெலாவத்தியில் உள்ள பொதுப் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டனர். மேலும், டத்தோ மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் மற்றும் கோம்பாக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் செத்தியா ரஹீம் கஸ்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவரது வருகையை உலு கிளாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜுவைரியா சுல்கிப்லி, லெம்பா ஜெயா தொகுதி உறுப்பினர் சையட் அஹ்மட் சையட் அப்துல் ரஹ்மான் அல்ஹடாட் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழக தலைவர் டாக்டர் அனி அஹ்மட் ஆகியோர் வரவேற்றனர்.
வருகையாளர்களுக்கு பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டதுடன், வாணவேடிக்கை மற்றும் சிங்க நடனத்துடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதற்கிடையில், உலு கிளாங் தொகுதி அளவில் இந்த ஆண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டம் கட்டிடத்திற்குள் முன்பு இருந்ததை விட சற்று வித்தியாசமானது என்று ஜுவைரியா தெரிவித்தார்.
எதிர்காலத்திற்காக ஒற்றுமையாக இருப்பதுடன், நல்லிணக்கத்தைப் பேணுவதும், ஒருவரையொருவர் மதித்து நடப்பதும் முக்கியம் என்றார் அவர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜுவைரியா அங்கபாவ் வழங்கினார்.


