SELANGOR

கோம்பாக் தொகுதி நிலையிலான மடாணி மலிவு விற்பனையில் 5,000 பேர் பங்கேற்பு

7 டிசம்பர் 2024, 8:54 AM
கோம்பாக் தொகுதி நிலையிலான மடாணி மலிவு விற்பனையில் 5,000 பேர் பங்கேற்பு

கோம்பாக், டிச 7- கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி  அளவிலான

மடாணி  மலிவு விற்பனை  இன்று தாமான் பிங்கிரான் பத்து கேவ்ஸ் இரவுச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்தையில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 8.00 மணிக்குத் தொடங்கிய  இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  2022 முதல் மாநில அரசினால் நடத்தப்பட்டு வரும்   எஹ்சான் ரஹ்மா  மலிவு விற்பனையும் நடைபெற்றதாக  மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மடாணி  மலிவான விற்பனையானது மத்திய அரசின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சியாகும். அதே நேரத்தில் ஜே.இ.ஆர். என்பது கடந்த  2022 முதல் மக்கள் அடிப்படைத் தேவைகளை மிகக் குறைந்த விலையில் பெற உதவும் சிலாங்கூர் அரசாங்கத்தின் முயற்சியாகும்.

இது ஒரு சுவாரஸ்யமான விற்பனை கலவையாகும், இது ஒரு நிலையான ஒற்றுமை அரசாங்கத்தினால் நிலையான கொள்கையை செயல்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கிறேன்,  இதன் மூலம்  செயல்திறன் மக்களைச் சென்றடையும் என்று அவர் கூறினார்.

கோம்பாக் நாடாளுமன்ற மத்திய மண்டல நிலையிலான மடாணி மலிவு விற்பனையை ஏக காலத்தில் தொடக்கி வைத்த  போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மண்டலத்திற்கான மடாணி மலிவு விற்பனை ​​பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில்   பெராமாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற வேளையில் தென் மண்டலத்திற்கான மடாணி மலிவு விற்பனை போர்ட்டிக்சன் தொகுதியில்   நடைபெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.