ஷா ஆலம், டிச 6 : ஹிஜ்ரா சிலாங்கூர் கீழ் உள்ள டாருல் எஹ்சான் வணிகத் திட்டம் (நாடி) தொழில் முனைவோர் மத்தியில் மிகவும் பிரபலமான நிதித் திட்டமாக மாறியுள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
ஐ-பிஸ்னஸ் திட்டத்துடன் ஒப்பிடும் போது நாடி திட்டம் கூடுதல் வரவேற்பை
பெற்றுள்ளது. இது சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு
மட்டுமே உரியது என டத்தோ மெரியா ஹம்சா கூறினார்.
இந்த ஆண்டு முழுவதும், ஹிஜ்ரா சிலாங்கூர் இந்த இரண்டு திட்டங்களுக்கும்
RM46.5 மில்லியன் நிதியை வழங்கியது. நாடி திட்டத்தின் மூலம் 288
பெண்களுக்கு RM2 மில்லியன் ஒதுக்கீட்டில் உதவியதன் வழி அது தொடர்ந்து
சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூரில் நாடியை
விரிவுபடுத்தி, தொழில் தொடங்க விரும்பும் அதிகமான பெண்களுக்கு உதவி
செய்வதை உறுதி செய்வோம் என அவர் ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமையகத்தில்
சந்தித்தபோது கூறினார்.
இந்த திட்டம் சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் போன்ற கிராமப்புறங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் இதை விரிவுபடுத்துவோம்.2015 ஆம் ஆண்டு நிறுவப் பட்டதில் இருந்து கடந்த ஆகஸ்ட் வரை அவரது தரப்பு 90,475 நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்ததாக மரியா கூறினார்.
இந்த நிதியுதவியானது 60,249 ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு பயனளித்துள்ளது என்றும், இதன் மூலம் அவர்கள் வணிக மூலதனத்தை
பெறவும், வணிக உபகரணங்களை வாங்கவும் உதவ முடியும் என அவர்
விளக்கினார்.


