ஷா ஆலம், நவ. 20: கார்ல்டன் ஹோட்டல் செக்ஷன்13ஐ சிலாங்கூர் இ-ஸ்போர்ட்ஸ் மைதானமாக புதுப்பித்திருப்பது இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, அத்துறையின் வளர்ச்சியையும் வலுப்படுத்தும்
இந்நாட்டில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ந்து வருகிறது, மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த சிலாங்கூருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என கோத்தா டமன்சாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது இசுவான் காசிம் கூறினார்.
"இந்த இ-ஸ்போர்ட்ஸ் மைதனம் இளைஞர்கள் பயிற்சி செய்வதை எளிதாக்குகிறது. எனவே இந்த ஹோட்டலை இ-ஸ்போர்ட்ஸ் கூடமாக மாற்றுவதற்கான மாநில அரசின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
"மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் மின்-விளையாட்டுகளை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சட்ட மசோதா 2025 பற்றி விவாதித்த போது கூறினார்.


