ஷா ஆலம், நவ 13: நேற்று சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகள் துறை (அனிஸ்) எம்பிஐ உடன் இணைந்து மாற்றுத் திறனாளிகள் சமத்துவ பயிற்சி (DET) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வேலை வாய்ப்புத் துறையில் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை (OKU) வெளிப்படுத்துவதற்காக எம்பிஐயின் துணை நிறுவனங்கள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்ததாக அனிஸ் தெரிவித்துள்ளது.
"இந்தப் பட்டறை மாற்றுத் திறனாளிகள் சமத்துவப் பயிற்சி தொடர்பான தகவல்களை வழங்குவதோடு அவர்களின் அணுகல் தேவைகள் பற்றிய புரிதலையும் அறிவையும் மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
"தொழில் உலகில், வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், சிலாங்கூரில் உள்ள முதலாளிகள் ஒரு சதவீத மாற்றுத் திறனாளிகள் கொள்கைக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்று அனிஸ் நம்புகிறது.
அரசாங்கம் 1988 ஆம் ஆண்டு அனைத்து முதலாளிகளுக்கும், குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரு சதவீத மாற்றுத்திறனாளிகள் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.


