SELANGOR

குழந்தை பராமரிப்பாளர்கள் கட்டாயமாக பட்டறைகளில் கலந்து கொள்ள வேண்டும்

8 நவம்பர் 2024, 8:24 AM
குழந்தை பராமரிப்பாளர்கள் கட்டாயமாக பட்டறைகளில் கலந்து கொள்ள வேண்டும்

ஷா ஆலம், நவ.8: குழந்தை பராமரிப்பாளர்கள் தகுந்த பட்டறைகளில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் போன்ற விதிமுறைகளுக்கு இணங்குமாறு மழலையர் பள்ளி

உரிமையாளர்களுக்கு நினைவூட்டப்படுவதாக சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர்

தெரிவித்தார்.

கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்ப விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் குழந்தை பராமரிப்பு பட்டறையில் கலந்துகொள்வது அவசியம் என்று அன்பால் சாரி கூறினார்.

சொந்த மழலையர் பள்ளி வைத்திருப்பவர்களும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக

மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) ஏற்பாடு செய்துள்ள 28 நாட்கள் நடைபெறும் பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப குழந்தை பராமரிப்பாளர்களை பணியமர்த்துவதும் இதில்

அடங்கும்    என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள்

இருந்தால், மழலையர் பள்ளி நடத்துபவர்கள் சமூக நலத் துறையை (ஜேகேஎம்)

அணுக்குமாறு அன்பால் பரிந்துரைத்தார்.

மாநில அரசு மழலையர் பள்ளி செயல்பாடுகள் உட்பட பல அம்சங்களை விரிவான முறையில் பார்க்க விரும்புகிறது, இதனால் சிறந்த சேவைகளை வழங்க முடியும், என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.