ஷா ஆலம், நவ. 6 - புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான
தீபாவளி பொது உபசரிப்பு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை
பெட்டாலிங் ஜெயா, லாமான் எம்.பி.பி.ஜே. வளாகத்தில் நடைபெறும்.
இரவு 7.00 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இந்த பொது
உபரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து
கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஆர்.ராஜீவ் கூறினார்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்துபசரிப்போடு இந்திய
பாரம்பரியக் கலையான பரதம் உள்ளிட்ட நடனங்களும் ஆடல், பாடல்
நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் சிறப்பு
அங்கமாக ராஜீவ் தோசை சுட்டு விருந்தினர்களுக்கு பரிமாறுவார்.


