SELANGOR

உணவு கூடை நன்கொடை திட்டத்திற்கு RM 2 மில்லியன் ஒதுக்கீடு

6 நவம்பர் 2024, 3:48 AM
உணவு கூடை நன்கொடை திட்டத்திற்கு RM 2 மில்லியன் ஒதுக்கீடு

சபாக் பெர்ணம், நவ 6: இந்த ஆண்டு முழுவதும் உணவு கூடை நன்கொடை திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக எம்பிஐ மூலம் மொத்தம் RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குழு (B40) மற்றும் முதியோர் உட்பட  பின்தங்கிய சமூகங்களுக்கு இந்த நிதி உதவுவதாக அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

"எம்பிஐ ஆரம்பத்தில் உணவு கூடை நன்கொடைகளுக்காக RM 1 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டை வழங்கியது, ஆனால், இந்த ஆண்டு RM 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

"இந்த திட்டம் மிகவும் பிரபலமானது மற்றும் மாநிலம் முழுவதும், குறிப்பாகக் கிராம தலைவர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பிரதிநிதிகளிடமிருந்தும் அதிக வரவேற்பையும் கோரிக்கையையும் பெறுகிறது," என்று அவர் கூறினார்.

இந்த உணவு கூடை நன்கொடை திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் 30,000 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.