கிள்ளான், அக்.28 : கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடை பெற்ற கிள்ளான் மாநகராட்சி கார்னிவலை 8,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
கிள்ளான் மாநகராட்சி மாநகரமாக அங்கீகரித்த ஒரு வருடத்துடன் இணைந்த இந்நிகழ்ச்சி பண்டமாறன் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த திட்டம் கிள்ளான் மாநகராட்சி குடிமக்களுக்கு பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை வழங்கியது என தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"இந்த நிகழ்வின் நோக்கம் வருகையாளர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதும் நட்பு உறவை வலுப்படுத்துவதாகவும் ஆகும்.
மேல்லும், இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது என்றார்.


