ஷா ஆலம், அக் 23: அடுத்த ஆண்டு பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நடைபாதைகளை
மேம்படுத்த RM3.9 மில்லியன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
வழங்கப்படும் வசதிகள் நகரவாசிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூக ஒருங்கிணைப்பைத் தூண்டுவதை உறுதி செய்வதில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உறுதியாக உள்ளது என்று அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள்
சம்பந்தப்பட்ட விஷயங்களை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, காரணம் இது மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கிறது.
பொழுதுபோக்கு வசதிகள், நடைபாதைகள் மற்றும் கால்வாய் அமைப்புகளை மேம்படுத்தும் பணி எட்டு திறந்தவெளி பகுதிகள் மற்றும் இரண்டு விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்படும் என்று நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி சிறப்பு கவுன்சில் கூட்டத்திற்கு (பட்ஜெட் 2025) தலைமை தாங்கிய போது கூறினார்.
ஜாலான் BU 4/1, ஜாலான் செசவி 6/19C, ஜாலான் PJU 3/18B, மற்றும் ஜாலான் SS 23/7
உள்ளிட்ட பல சாலைகளை தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் முகமது ஜஹ்ரி உள்ளூர்
அதிகாரிகளிடம் தெரிவித்தார்.