SELANGOR

சுமார் 200 பேர் இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் கலந்து கொண்டனர்

16 அக்டோபர் 2024, 4:53 AM
சுமார் 200 பேர் இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், அக் 16: கடந்த சனிக்கிழமை சுங்கை ரமால் தொகுதில் நடைபெற்ற இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் மலேசியர்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு அதிகமாகி வருவது தெரிகிறது என சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண், இரத்தம், சிறுநீர், உயர் இரத்த அழுத்தம், குளுக்கோஸ், உடல் பரிசோதனைகள் மற்றும் பிசியோதெரபி ஆகியவை இடம்பெற்றன.

இந்த அக்கறை மலேசியர்களை ஆரோக்கியமாக இருக்கச் செய்வதோடு நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.