ஷா ஆலம், அக் 12: திடீர் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க மாவட்டம் முழுவதும் நீர் ஓடைகள் சுத்தம் செய்யும் பணியை எம்பிஎஸ்ஏ மேற்கொள்கிறது
நகர்ப்புறங்களில் நீர் ஓடைகளில் வீசப்படும் குப்பைகளால் அடிக்கடி திடீர் வெள்ளம், ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.
எம்பிஎஸ்ஏ சுற்றுச்சூழல் மற்றும் திடக்கழிவுத் துறையால் ஒவ்வொரு வாரமும் நீர் ஓடைகள் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
"கம்போங் குபு கஜா, கம்போங் மெலாயு சுபாங்,பாயா ஜராஸ், ஜாலான் கெபூன் மற்றும் கோத்தா கெமுனிங் போன்ற நகர மையம் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் எம்பிஎஸ்ஏ பல்வேறு உபகரணங்களை தயார்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
அதில் இரண்டு ஃபைபர் படகுகள், மூன்று அதிவேக மோட்டார்படகுகள், இரண்டு கூடுதல் படகுகள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் தலைக்கவசங்கள் ஆகியவை அடங்கும்," என்று அவர் கூறினார்.


