ECONOMY

சொக்சோ ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன்  சுயதொழில் செய்பவர்களை குறிவைக்கிறது

6 அக்டோபர் 2024, 6:03 AM
சொக்சோ ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன்  சுயதொழில் செய்பவர்களை குறிவைக்கிறது

சிரம்பான், அக்.6 -  சமூக பாதுகாப்பு  நிறுவனம்  (சொக்சோ) இந்த ஆண்டு இறுதிக்குள் சுயதொழில்  செய்யும்  ஒரு மில்லியன் பங்களிப்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

அதன் தலைமை தகவல் தொடர்பு மற்றும் பெருநிறுவன விவகார அதிகாரி Roshaimi Mat Rosely, செப்டம்பர் 27 நிலவரப்படி நாடு முழுவதும் Socso இல் 693,969  சுயதொழில் பங்களிப்பாளர்களை பதிவு செய்துள்ளனர்,  இது காலப்போக்கில் புதிய பங்களிப்பாளர்களை அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது  என்றார்.

"சுயதொழில் வியாபாரிகள் மற்றும் உரிமம் பெற்ற வர்த்தகர்களுக்கான சுய வேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்ட பங்களிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நடைமுறை படுத்தப்படும் என்பதால், சுயதொழில் செய்பவர்களின்  உறுப்பினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

இன்று  நெகிரி செம்பிலான்  சிரம்பானில் சோரா வர்த்தக மையத்தில்  மீடியாவுடன் ஆன சந்திப்பில்  குறிப்பாக  வர்த்தகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உட்பட சுயதொழில் செய்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனைத்து தரப்பினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு அமர்வுகள் ஆண்டு முழுவதும், நாட்டில்   நடத்தப்படும்.

சொக்சோ வுக்கு பங்களிப்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க பகுதி நேர ஊடக பயிற்சியாளர்கள் உட்பட சுயதொழில் செய்பவர்களை ஈர்பதில் தொடர்ந்த ஈடுபாட்டை தீவிரமாக்க உள்ளதாக  ரோஸ்ஹைமி   கூறினார். குறிப்பாக விரிவான நீண்ட கால சமூகப்  பாதுகாப்புடன் சுயதொழில் செய்பவர்கள்  பல்வேறு முன் முயற்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.