SELANGOR

பள்ளி விடுமுறையில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் ஏற்பாடு

18 செப்டெம்பர் 2024, 6:11 AM
பள்ளி விடுமுறையில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் ஏற்பாடு

ஷா ஆலம், செப் 18: பள்ளி விடுமுறையை முன்னிட்டு ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெறும் மினி கார்னிவலில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான வகுப்புகள் இடம்பெறும்.

செப்டம்பர் 14 முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக வழங்கப்படுவதாகப் பிபிஏஎஸ் தெரிவித்துள்ளது.

“ஒரு சில விளையாட்டுக்ளுக்கு மட்டுமே RM2 குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் பிபிஏஎஸ் இணையதளத்திற்குச் சென்று நடவடிக்கைகளின் அட்டவணையைப் பார்க்கலாம் மற்றும் பங்கேற்புப் பதிவை ராஜா துன் உடா நூலகத்தில் உள்ள நிரல் கவுண்டரில் மேற்கொள்ளலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அடிப்படை சமையல் வகுப்புகள், ஓரிகமி தயாரித்தல், அடிப்படை வீடியோகிராபி, பிளேஸ்டேஷன் 5 விளையாடுதல் மற்றும் ரூபிக்ஸ் கியூப் சவால் ஆகிய நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.