ஷா ஆலம், செப் 3: இன்று காலை தாமான் தாசிக் ஷா ஆலம் செக்ஷன் 7 ஏரியில் முதலை காணப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.
“ஷா ஆலம் ஏரியில் முதலை காணப்பட்டது குறித்து, சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை மூலம் எம்பிஎஸ்ஏ அறிந்துள்ளது.
"தாமான் தாசிக் ஷா ஆலம் செக்ஷன் 7 ஏரிக்குச் செல்லும் பொதுமக்களை கவனமாக இருக்குமாறு எம்.பி.எஸ்.ஏ கேட்டுக் கொள்வதாக அந்த பிபிடி முகநூலில் தெரிவித்துள்ளது.


