ஷா ஆலம், ஆகஸ்ட் 13: மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரை பல்வேறு சுவாரஸ்யமான திட்டங்களை கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்குகிறது.
மேலும், ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 16 வரை எம்பிகேஎஸ் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் அபராதக் கட்டணங்களில் 50 சதவீதம் குறைப்பு வழங்கப்படும் என்று எம்பிகேஎஸ் தெரிவித்துள்ளது
“இந்த குறைப்பு சலுகையானது ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 30 வரை வாகன நிறுத்தும் குற்றங்களுக்கும் (நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்) வழங்கப்படும் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது. அதாவது வாகன நிறுத்தும் குற்றங்களுக்கு RM10 மட்டுமே வசூலிக்கப்படும்.


