SELANGOR

மகளிர்களுக்கான யாங் டிபெர்துவா கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு

24 ஜூலை 2024, 5:26 AM
மகளிர்களுக்கான யாங் டிபெர்துவா கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 24: எதிர்வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் மகளிர்களுக்கான

யாங் டிபெர்துவா கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க குடியிருப்பாளர்களுக்கு

கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், RM5,800 வழங்கும் இப்போட்டியானது கோலா சிலாங்கூர் விளையாட்டு

வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று ஊராட்சி மன்றம்

தெரிவித்துள்ளது.

இதில் பெண்கள் திறந்த பிரிவுக்கு நுழைவுக் கட்டணம் RM150 மற்றும் `close`

பிரிவினருக்கு RM100 – கோலா சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு கட்டணமாக

வசூலிக்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆகும். மேலும்

விபரங்களுக்கு, புவான் நோர்சியானாவை 019-3636746 என்ற எண்ணில் தொடர்பு

கொள்ளவும் என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்

மற்றும் மாநில, தேசிய அல்லது நெட்பால் சூப்பர் லீக் (NSL) வீரர்களில் ஒருவர் மட்டுமே

குழுவில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்.

பங்கேற்பாளர்கள் கோலா சிலாங்கூரில் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும்

மாணவர்கள் அல்லது கோலா சிலாங்கூரில் பணிபுரியும் நபர்கள் தங்கள் பாஸ்

நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவு மற்றும் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணத்தை பின்வரும் இணைப்பு

https://mycomm.mpks.gov.my மூலம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.