SELANGOR

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1 மில்லியன் நிதியை எம்பிஐ வழங்கியது

19 ஜூலை 2024, 6:21 AM
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1 மில்லியன் நிதியை எம்பிஐ வழங்கியது

கோலா லங்காட், ஜூலை 19: இந்த ஆண்டு குறிப்பாகப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக RM1 மில்லியன் நிதியை எம்பிஐ வழங்கியது.

ஜூலை மாதம் வரை மொத்தம் RM500,000 பயன்படுத்தப் பட்டதாகக் அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி கூறினார். அதில் தெலுக் பங்லிமா காராங்கில் கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு ரொக்கம் வழங்கப்பட்டதும் அடங்கும்.

“ஒவ்வொரு ஆண்டும் பேரிடரால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குறிப்பிட்ட ஒதுக்கீட்டை நாங்கள் தயார் செய்கிறோம். அது வெள்ளம், புயல் அல்லது தீ விபத்து போன்ற எந்த வகையான பேரிடராக இருந்தாலும் உதவி வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர், "நன்கொடைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை மாறாக வீடுகள், மசூதிகள், சூராவ்கள் அல்லது பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைப்பதிலும் கவனம் செலுத்துப்படுகிறது" என்று கூறினார்.

ஏப்ரல் 14 அன்று பலத்த மழை மற்றும் புயல் தாக்கியதால் கம்போங் தெலுக் பங்லிமா காராங்கில் வசிப்பவர்களின் சில வீடுகள் பாதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மோரிப்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீனவர்களின் ஜெட்டியை சரிசெய்யவும் மாநில அரசின் துணை நிறுவனம் RM124,700 அனுப்பியது.

அந்தத் தொகை குறித்து டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட 152 குடும்பங்களுக்கு ரிங்கிட் 76,000 வழங்கப்பட்டது அதாவது ஒவ்வொருவரும் ரிம500 பெற்றனர்.

மீதமுள்ள ரிங்கிட் 48,700 கம்போங் கெலானாங் மோரிப் ஜெட்டியை சரிசெய்ய மீனவர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.