SELANGOR

முதல் முறையாக  இரு ‘’ ருக்குன் தெத்தாங்கா’’ குடியிருப்புகள்  இணைந்து நடத்திய மடாணி வேளாண் சந்தை

13 ஜூலை 2024, 7:58 AM
முதல் முறையாக  இரு ‘’ ருக்குன் தெத்தாங்கா’’ குடியிருப்புகள்  இணைந்து நடத்திய மடாணி வேளாண் சந்தை

உலு சிலாங்கூர், ஜூலை 13: இன்று செரெண்டாவில் உள்ள மெல்லோர் மற்றும் அங்கேரிக் கிராமங்களின் குடியிருப்போர் சங்கங்கள் (KRT) முதல் முறையாக ஒன்றிணைந்து வெற்றிகரமான மடாணி வேளாண் விற்பனையை நடத்தின.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சந்தையை விட குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.

ஃபாமாயுடன் இணைந்து மேற்கொண்ட இத்திட்டம் விற்பனைக் கடைகளைத் திறப்பதன் வழி குடியிருப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட உதவியது என முகமட் கமல் ஹாஷிமின் தெரிவித்தார்.

"இந்த திட்டத்தில் ஃபாமா, இரண்டு கிராமங்களின் குடியிருப்போர் சங்கங்கள் உட்பட சுமார் 30 வர்த்தகர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு குடியிருப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த விற்பனை குடியிருப்பாளர்களுக்கு நியாயமான விலையில் புதிய பொருட்களை பெற உதவியது மற்றும் சந்தையை விலையை விட குறைவாக இருந்தது என பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

"இத்திட்டம் பல நன்மைகளை வழங்குவதால் எதிர்காலத்திலும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என சைபுடின் ஷாபி முகமட் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.