SELANGOR

“கிள்ளான் மாநகராட்சி உடன் பிக்னிக் செல்வோம்“ திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

20 ஜூன் 2024, 2:49 AM
“கிள்ளான் மாநகராட்சி உடன் பிக்னிக் செல்வோம்“ திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 19: எதிர்வரும் ஜூன் 23 அன்று ராயல் “கிள்ளான் மாநகராட்சி உடன் பிக்னிக் செல்வோம்“ திட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போர்ட் கிள்ளானில் உள்ள மாங்குரோவ்

பொய்ண்ட் எனும் இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்குப்

பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம் மற்றும் பார்வையாளர்கள் பச்சை நிற ஆடைகளை அணிய

ஊக்குவிக்கப்படுவதாகவும் எம்பிடிகே முகநூலில் தெரிவித்தது.

இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் சுற்றுலா பகுதியை அலங்கரித்தல்,

சாலட் தயாரித்தல், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து ஆடைகளை

வடிவமைத்தல், வண்ணம் தீட்டுதல் மற்றும் புதையல் வேட்டை ஆகியவை அடங்கும்

மேலும், ஏரோபிக்ஸ் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களின் கண்காட்சிகளும்

நடைபெறும்.

மேலும் தகவலுக்கு பொதுமக்கள் சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பிரிவு, எம்பிடிகேயை 012-

269 2234 (ஃபஹ்ருல்) அல்லது 016-657 0753 (நளினி) என்ற எண்ணில் தொடர்பு

கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.