SELANGOR

உணவு வளாகங்களில் எண்ணெய் பொறிகளை நிறுவுவது கட்டாயம்

13 ஜூன் 2024, 9:41 AM
உணவு வளாகங்களில் எண்ணெய் பொறிகளை நிறுவுவது கட்டாயம்

ஷா ஆலம், ஜூன் 13: சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் அதன் நிர்வாகத்தின் கீழ்

உள்ள அனைத்து உணவு வளாகங்களிலும் தூய்மைக்காக எண்ணெய் பொறிகளை

நிறுவுவதை கட்டாயமாக்கியுள்ளது.

கழிவுகளை அகற்றும் குழாயின் ஒரு பகுதியில் எண்ணெய் பொறியை நிறுவி தினசரி

அல்லது வாராந்திர அடிப்படையில் பராமரிக்க வேண்டும் என்று அதன் கார்ப்பரேட்

மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு விளக்கியது.

வளாகத்தின் உரிமையாளர்கள் தங்களுக்குரிய பராமரிப்பு அட்டவணைகளை வளாகத்தில்

பார்வைக்கு வைக்க வேண்டும் மற்றும் விதிமுறைகளின்படி சுத்தம் செய்யப்படுவதை

உறுதி செய்ய வேண்டும் என உள்ளூர் அதிகாரசபை தெரிவித்தது.

"எண்ணெய்ப் பொறியில் உள்ள எண்ணெய் மற்றும் கிரீஸ் (FOG) போன்றவற்றை

குப்பையில் அப்புறப்படுத்துவதற்கு முன் கருப்பு பிளாஸ்டிக்கில் போட வேண்டும்.

அவற்றை சாக்கடையில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது" என்று சபாக் பெர்ணம்

நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

இதை அமல்படுத்த தவறிய உரிமையாளர்கள் உணவு நிறுவன உரிமச் சட்டத்தின்

(MDSB) 2007 இன் பிரிவு 65இன் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன்

மூலம், RM2,000க்கும் குறைவான அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல்

சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்

குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே குற்றங்கள் செய்தால், ஒவ்வொரு நாளுக்கும்

RM200க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.