SELANGOR

புதிய மதிப்பீட்டு வரிக்குப் பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம்

13 ஜூன் 2024, 8:23 AM
புதிய மதிப்பீட்டு வரிக்குப் பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 13: நாளைக்குள் ஷா ஆலம் மாநகராட்சியின் புதிய மதிப்பீட்டு வரி விதிப்புக்குப் பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம்.

மக்களுக்கான மாநகராட்சியின் சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 19 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீட்டு வரி மறு ஆய்வு செய்யப்படுவதாக அதன் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் தெரிவித்தார்.

புதிய விகிதம் 25 சதவீதத்தை தாண்டவில்லை என்று விளக்கிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கும் புதிய கட்டணம் குறித்து சொத்து உரிமையாளர்களிடமிருந்து 1,990 ஆட்சேபனைகள் பெறப்பட்டன.

“மதிப்பீட்டு வரியை அதிகரிப்பதில் எந்த கட்டாயமும்  இல்லை, ஆனால் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஷா ஆலம் மாநகராட்சிக்கு வலுவான நிதி தேவைப்படுகிறது.

“இந்த உயர்வு பழைய வரியின் 25 சதவீதத்துக்கு மேல் இல்லை, ஆனால் நாங்கள் ஆட்சேபனைகளை ஏற்றுக் கொள்கிறோம், மேலும் சொத்து உரிமையாளர்களை மேல் முறையீடுகளை செவிமடுக்க அழைப்போம்” என்று அவர் கூறினார்.

ஆட்சேபனை காலம் முடிவடைந்த பின்னர் நடைபெறும் சிறப்பு அமர்வில் புதிய கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சொத்து உரிமையாளர்களை சந்திக்க தனது தரப்பு தயாராக உள்ளது என்று முகமட் ஃபௌசி மேலும் கூறினார்.

இந்த விகிதம் குடியிருப்பு, வணிக, தொழில்துறை மற்றும் காலியான (விவசாய) நிலங்களை உள்ளடக்கியது, அதே நேரத்தில் வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் மற்றும் இலாப நோக்கம் அற்ற பொது வளாகங்கள் வரி விலக்குகளைப் பெறுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.