SELANGOR

செலாயாங் நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்) புதிய தலைவராக ஷாமான் ஜலாலுடின் பதவியேற்பு

5 ஜூன் 2024, 9:36 AM
செலாயாங் நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்) புதிய தலைவராக ஷாமான் ஜலாலுடின் பதவியேற்பு

கோம்பாக், ஜூன் 5: இன்று சியாந்தான் அறை, மெனாரா எம்பிஎஸ் சில் செலாயாங் நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்) புதிய தலைவராக ஷாமான் ஜலாலுடின் பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மாநகர அந்தஸ்தை அடையும் எம்.பி.எஸ்ஸின் தொலைநோக்குப் பார்வையில் கவனம் செலுத்துவேன் என்று பதவியேற்ற பிறகு ஷாமான் கூறினார்.

"இதன் மூலம், ஒரு முழுமையான திட்டத்தின் தேவைக்குக் கூடுதலாகப் பல சவால்கள் மற்றும் தடைகளை நாங்கள் சந்திப்போம்," என்று அவர் கூறினார்.

மேலும், , செலாயாங்கை குறைந்த கார்பன் மற்றும் ஸ்மார்ட் நகரமாக மாற்றும் இலக்கை அடைவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.

2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை ஒரு ஸ்மார்ட், வாழத் தகுதியான மற்றும் வளமான மாநிலமாக மாற்றுவதற்கான முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) நோக்கத்தை அடைய எம்பிஎஸ் உறுதிபூண்டுள்ளதாக ஷாமான் கூறினார்.

ஷாமான் (45), மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) உத்தி மற்றும் பாதுகாப்பு பகுப்பாய்வில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

முன்னதாகக் கிள்ளான் மாவட்ட அதிகாரியாக இருந்த அவர், மார்ச் 1 அன்று புதிய சிலாங்கூர் மாநில அரசின் துணைச் செயலாளராக (மேலாண்மை) நியமிக்கப்பட்ட டத்தோ முகமட் யாசிட் சாய்ரிக்குப் பதிலாகப் பதவியேற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.