SELANGOR

கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி – சிலாங்கூர் பெவிலியனில் மாநில அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வழங்கப்படும்

27 மே 2024, 2:49 AM
கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி – சிலாங்கூர் பெவிலியனில் மாநில அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், மே 27: கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு (பிபிஏ கேஎல்) வருகை புரியும் பொதுமக்கள், மே 24 முதல் ஜூன் 2 வரை மாநில அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பெறுவதற்காகச் சிலாங்கூர் பெவிலியனுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தின் மூன்றாம் மட்டத்தில் உள்ள சிலாங்கூர் பெவிலியனில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) தெரிவித்தது.

“சிலாங்கூர் பெவிலியனில் எங்கள் ஏஜென்சி கூட்டாளர்களைச் சந்தித்து சிலாங்கூர் மாஜு பெர்சாமா நிகழ்ச்சி நிரல் தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் சமீபத்திய திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசின் மானியத்தைப் பெற்று, பல்வேறு வகைகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை வெளியிடுவதில் டாருல் எஹ்சான் புத்தகத் திட்டம் (IBDE) தீவிரமாக உள்ளது.

டாருல் எஹ்சான் புத்தகத் திட்டத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களை வாங்குபவர்கள் 10 முதல் 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியை அனுபவிப்பார்கள். மேலும், அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் சிறப்புப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டு.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.