SELANGOR

உலு சிலாங்கூரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 80,000 ஐ எட்டியது

29 ஏப்ரல் 2024, 4:55 AM
உலு சிலாங்கூரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 80,000 ஐ எட்டியது

ஷா ஆலம், ஏப் 29: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோலா குபு பாரு, 1930 இல் நகர திட்டமிடுபவர்கள் திட்டமிடப்பட்ட முதல் வரலாற்று பாரம்பரிய நகரமாகும்.

இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு பொதுவாக கடந்த ஆண்டு மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 80,000 ஐ எட்டியது.

இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 70,193 ஆகவும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7,328 ஆகவும் உள்ளது என சுற்றுலா சிலாங்கூர் நிறுவன தகவல் தொடர்பு மேலாளர் கூறினார்.

"சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தன்மை கொண்ட பல்வேறு இடங்கள் கோலா குபு பாருவில் உள்ளன. இயற்கைக்கு கூடுதலாகக், கோலா குபு பாருவில் தங்குவதற்கான இடங்கள், உணவகங்கள் மற்றும் நிகழ்வுகள் உள்ளன" என்று அஹ்மட் நஸ்ரி தஷ்ரிக் ரஹ்மட் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.