SELANGOR

புவி தின விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு

24 ஏப்ரல் 2024, 8:52 AM
புவி தின விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 24: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தாமான் தாசிக் பண்டாரன் கெலனா ஜெயாவில் நடைபெறும் மாநில அளவிலான புவி தின விழாவை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் சந்தை, பாரம்பரிய சுற்றுச்சூழல் விளையாட்டு நிலையம் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, சமூகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பூமி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காகப் பட்டறைகள் மற்றும் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடத்தப்படும்.

“எலக்ட்ரானிக் கழிவுகள் (இ-வேஸ்ட்) உள்ளிட்ட மறுசுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்களையும் நீங்கள் கொண்டு வரலாம் மற்றும் அதன் மூலம் சுற்றுச்சூழல் சந்தையில் செலவிட பணத்தைப் பெறலாம்” என்று ஜமாலியா ஜமாலுடின் முகநூல் மூலம் தெரிவித்தார்.

பார்வையாளர்கள் தங்கள் பயன்படுத்திய ‘டோட் பேக்குகள்’ மற்றும் டி-சர்ட்கள் போன்றவற்றைக் கொண்டு வந்து பட்டுத்திரை அச்சிடும் பட்டறையில் இலவசமாகப் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்று ஜமாலியா கூறினார்.

மேலும் தகவலுக்கு @heybumikita ஐப் பார்வையிடவும் அல்லது 012-688 6996 (வாட்ஸ்அப்) ஐ தொடர்பு கொள்ளவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.