ஷா ஆலம், ஏப் 22- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல்
27ஆம் தேதி கோல குபு பாரு நகரில் நடைபெறவிருக்கும் ‘ரியோ ராயா
கித்தா சிலாங்கூர்‘ நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து
கொள்ள பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்த உபசரிப்பில் பல்வேறு
சுவாரஸ்யமான நிகழ்வுக்ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில
அரசுச் செயலகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களுடன் கூடிய விருந்துசரிப்பு,
பிரபல கலைஞர்களின் படைப்புகள், பெருநாள் பண அன்பளிப்பு, வாண
வேடிக்கை ஆகியவையும் அந்த நிகழ்வுகளில் அடங்கும் என அது
தெரிவித்தது.
ரியோ ராயா பெருநாள் பொது உபசரிப்புக்கு மெருகூட்ட தவறாது நாம்
அனைவரும் கலந்து கொள்வோம். கித்தா சிலாங்கூர் 2024 நிகழ்வில்
சந்திப்போம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


