SELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப உதவிகள் வழங்கப்பட்டன

19 ஏப்ரல் 2024, 7:25 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப உதவிகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஏப் 19: நேற்று சுராவ் தாமான் செத்தியா வாரிசானின் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப உதவிகளை யாயாசான் இஸ்லாம் டாருல் எஹ்சன் (யீட்) வழங்கியது.

பிபிஎஸ்ஸில் தஞ்சமடைந்த 69 பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்க கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிமிடம் பிரிஹாதின் பேக்கட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

“நேற்று மதியம் நீடித்த கனமழையால் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

"யீட் பிரிஹாதின் பேக்கில் விநியோகிக்கப்படும் ஆரம்ப உதவியானது, பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காகப் போர்வைகள், துண்டுகள், உடைகள், கயிலி, பாதேக் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

அக்கறையுள்ள பங்களிப்பாளர்களுக்கு யீட் எனப்படும் சிலாங்கூரின் இஸ்லாமிய அமைப்பு  பாராட்டுகளைத் தெரிவித்தது. இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களை 03-33459900 (யீட்  தலைமையகம்) என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு இசுவான் அழைப்பு விடுத்தார்.

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை https://infaqpay.my/plus/dana-musibah-yide என்ற இணைப்பின் மூலம் அனுப்பலாம் மற்றும் அவர்கள் வருமான வரிச் சட்டம் 1967 இன் பிரிவு 44(6) இன் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையவர்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.