கிள்ளான், ஏப் 17: கடந்த ரம்ஜான் மாதத்தில் உணவு கூடைகளை வழங்குவதற்கும் மசூதிகள் மற்றும் சூராவுகளுக்கு நன்கொடை அளிப்பதற்கும் RM60,000க்கு மேல் செலவிடப்பட்டது.
36 சூராவுகளுக்கு RM1,000யும் நான்கு மசூதிகளுக்கு RM2,000யும் தனது தரப்பு வழங்கியதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீட் கூறினார்.
"மேலும், மக்களின் சுமையை குறைப்பதற்கும் பெறுநர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் 50 அஸ்னாஃப்களுக்கு உணவு கூடைகளை வழங்க ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் ஒதுக்கினோம்.
"அதே நேரத்தில், நாங்கள் குடியிருப்பாளர்களுடன் இப்தார் நிகழ்ச்சியையும் நடத்தினோம். இத்திட்டம் தலைவர்களை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக்குகிறது," என்று அவர் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில் சந்தித்தபோது கூறினார்.
இந்த ஆண்டு, இஹ்யா ரம்ஜான் திட்டத்தை வெற்றியடைய செய்ய எம்பிஐ RM4 மில்லியனை ஒதுக்கியது. இதில் மசூதிகள், சூராவுகள், அஸ்னாஃப் குழுக்கள் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்ட அமைப்புகளும் அடங்கும்.


