ஷா ஆலம், ஏப் 8: நேற்று செந்தோசா தொகுதியில் 100க்கும் மேற்பட்ட அஸ்னாவ் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் ஐடில்பித்ரிக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் ராயா பணத்தை நன்கொடையாகப் பெற்றனர்.
ராயா பண்டிகைக்கு தயாராகும் வகையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வழங்கப் பட்டன என சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.
"இந்த ஆண்டு ஹரி ராயாவை அனைவரும் கொண்டாடும் வகையில், தேவைப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
"பெறுநர்கள் தாமான் செந்தோசா, கம்போங் ஜாவா, பொத்தானிக் மற்றும் பண்டாமர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
"இந்த உதவி, ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இந்த பெருநாளைக் கொண்டாட உதவும்" என அவர் நம்புகிறார்.


