கிள்ளான், ஏப் 5: பூலாவ் இண்டாவில் உள்ள ஸ்ரீ பஹ்தேரா அடுக்குமாடி குடியிருப்பில்
வசிப்பவர்களுக்கு உணவு கூடைகள் மற்றும் பணத்தைக் கிள்ளான் மாநகராட்சி
விநியோகித்து
ஆதரவற்றோர், ஒற்றைத் தாய்மார்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் அடங்கிய 50
நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற்றதாகக் கிள்ளான் மேயர் டத்தின் படுகா
நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.
முதல் முறையாக நாங்கள் இந்த உதவித் திட்டத்தை உயர் நிர்வாகம் மற்றும் துறைத்
தலைவர்கள் மொத்தம் 22 நபர்களை உள்ளடக்கியதாக நடத்துகிறோம்.
நாங்கள் RM10,000 ரொக்கமாகச் சேகரித்து அதை உணவு கூடைகள் மற்றும் ஐடில்பித்ரி
நன்கொடைகள் வடிவில் விநியோகித்தோம் என்று கூறினார்.
குடியிருப்புக் குழுவை அமைக்க சமூகத்தை ஊக்குவிப்பதற்காக கட்டிட ஆணையர்கள்
துறை குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்வையிட்டபோது இத்திட்டம்
நடத்த எண்ணம் தோன்றியது என நோரைனி விளக்கினார்.
இங்கிருந்து பல இலக்கு குழுக்களுக்கு உதவி தேவைப்படுவதை நாங்கள் காண்கிறோம்.
இந்த நன்கொடையானது சுமையைக் குறைக்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு
மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று அவர் கூறினார்.


