SELANGOR

440 மசூதிகளுக்கு மாநில அரசு RM1.54 மில்லியன் நன்கொடை

3 ஏப்ரல் 2024, 4:54 AM
440 மசூதிகளுக்கு மாநில அரசு RM1.54 மில்லியன் நன்கொடை

ஷா ஆலம், ஏப் 3: வழிபாட்டு சேவையைப் பாராட்டி மாநிலம் முழுவதும் உள்ள 440 மசூதிகளுக்கு மாநில அரசு மொத்தம் RM1.54 மில்லியன் நன்கொடையாக வழங்கியது.

கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திட்டம் மூலம் வழங்கப்படும் நன்கொடைகள் ஹரி ராயா பண்டிகைக்குத் தயாராவதற்கு அவர்களின் சுமையைக் குறைக்கும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இந்த மாநிலத்தில் இஸ்லாத்தின் மத நிறுவனமான மசூதியின் செயல்பாட்டை மாநில அரசு தொடர்ந்து ஆதரிக்கும்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள ஒற்றுமை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு உதவிகள் மூலம் இமாம்கள், பிலால்கள், சியாக் மற்றும் நசீர்களின் நலனை பாதுகாக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

"சிலாங்கூரில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகம் மாநிலம் முழுவதும் அக்குழுவின் நலனில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது மற்றும் அவதூறானது" என்று அவர் விளக்கினார்.

இந்த நன்கொடையைச் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா மசூதியில் அமிருடின் வழங்கினார். இந்நிகழ்வில் மத ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி நகாவும் கலந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.