ஷா ஆலம், ஏப் 2: கோத்தா அங்கேரிக் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 900 நபர்கள் ஐடில்பித்ரியை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.
ஜோம் ஷாப்பிங் வவுச்சர் விநியோகத் திட்டத்திற்கு RM180,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"ஒவ்வொரு நபருக்கும் RM200 மதிப்புத்தக்க வவுச்சர் வழங்கப்பட்டது.
"இந்த உதவி குடியிருப்பாளர்களின் சுமையை குறைக்கும் மற்றும் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது," என அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
கடந்த ஆண்டு, பண்டிகை கால ஜோம் ஷாப்பிங் வவுச்சர் உதவித் திட்டம் RM16.48 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடரும் என்று டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.
சீனப் புத்தாண்டு, ஐடில்பித்ரி மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கிய பண்டிகை காலங்களில் 82,400 பின்தங்கிய குடும்பங்களுக்கு RM200 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான வவுச்சர்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.


