ஷா ஆலம், ஏப் 2: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தமாகக் குப்பை சேகரிக்கும் சேவையை நேற்று தொடங்கி ஏப்ரல் 7 வரை செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) வழங்குகிறது.
மின்சார மற்றும் மின்னணு கழிவுகள் (இ-கழிவுகள்) மற்றும் தளவாட பொருட்களை மக்கள் எளிதாக அகற்ற உதவுவதற்காக KDEB கழிவு மேலாண்மை உடன் இணைந்து 'ஸ்பிரிங் கிளீனிங்' திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் சோஃபாக்கள் மற்றும் படுக்கைகள், மின் மற்றும் மின்னணு கழிவுகள் (இ-கழிவுகள்), மறுசுழற்சி கழிவுகள் ஆகியவற்றை அகற்றலாம்.உணவுக் கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
"இத்திட்டத்தில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
"சேகரிப்பு நேரத்தை முன்பதிவு செய்ய, திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைத் துறையை (JPSPK) 03-6126 6080 என்ற எண்ணில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டது.


