SELANGOR

பயன்படுத்திய ஆடைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

25 மார்ச் 2024, 2:24 AM
பயன்படுத்திய ஆடைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 25: இன்னும் நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய ஆடைகளை கம்போங் துங்கு தொகுதியின் சமூக சேவை மையத்தில் வழங்குமாறு பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சேகரிக்கப்பட்ட ஆடைகள் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு விநியோகிக்கப்படும், மேலும் இது ஐடில்பித்ரியைக் கொண்டாடப்படுவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

"இந்த ``#BundleRaya`` திட்டம் மூன்றாவது ஆண்டாகத் தொடரப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வரவேற்பு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தனிப்பட்ட நன்கொடைகள் தவிர, நாங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து உடைகளைப் பெறுகிறோம்.

"பாஜு கூரோங், கெபாயா, சம்பிங், சொங்கோக், துடோங் மற்றும் காலணிகள் போன்ற பயன்படுத்தப்பட்ட பொருட்களை வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று லிம் யி வெய் அவர்களைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள எந்தவொரு தனிநபரும் கம்போங் துங்கு தொகுதியின் சமூக சேவை மையத்தில் மார்ச் 27 வரை பொருட்களை ஒப்படைக்கலாம் என்று அவர் விளக்கினார்.

அதன் பிறகு நன்றாக இருக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து பிரிக்கத் பின்னர் அவை மார்ச் 30 ஆம் தேதி ஸ்ரீ அமான் பிளாட்டின் பொது மண்டபத்தில் விநியோகம் செய்ய  திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு, 018-906 0270 என்ற வாட்ஸ்அப் மூலம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நூர் ரஹீம் நசீரைத் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.