SELANGOR

பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பேச்சு போட்டிகள் நடத்துவதற்கு மாநில அரசு ஆதரவு

13 மார்ச் 2024, 4:15 AM
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பேச்சு போட்டிகள் நடத்துவதற்கு மாநில அரசு ஆதரவு

ஷா ஆலம், மார்ச் 13: எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் பேச்சு

போட்டிகளை நடத்துவதற்கான மாநில அரசு எப்போதும் ஆதரவளிக்கிறது.

இந்தப் போட்டியின் மூலம் படைப்பாற்றல் மிக்கவர்களையும் மற்றும் சிறந்த முறையில்

தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவர்களையும் உருவாக்க முடியும்

என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் பேச்சு போட்டி 2024யின்

கோப்பையை வென்ற மலேசியா இஸ்லாம் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு (உசிம்)

அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) மற்றும்

மூன்றாம் இடத்தை வென்ற யுனிவர்சிட்டி பெர்தஹானன் நேஷனல் மலாயா (யுபிஎன்எம்)

ஆகியவைக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 47 அணிகள் மற்றும் 13 பிராயூனிவர்ஸ்சிட்டி

அணிகளின் பங்கேற்புடன் சிலாங்கூர் மாநில தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு

மையத்தில் நடைபெற்ற இப்போட்டி அதன் மூன்றாம் ஆண்டை எட்டியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.