ஷா ஆலம், மார்ச் 4: கடந்த சில ஆண்டுகளாக தலைசிறந்த படைப்புகள் உட்பட பல்வேறு வகையான புத்தகங்களை மொழி பெயர்த்து வெளியிடும் திட்டம் அறிவுத் துறையில் மேம்பாட்டை ஆதரிக்கிறது.
புத்தக விற்பனை திட்டங்கள் மற்றும் கார்னிவல்களை ஏற்பாடு செய்வதிலும் மாநில நிர்வாகம் கவனம் செலுத்துகிறது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
"மாநில அரசு புத்தக வெளியிடு திட்டத்தை ஆதரிக்கிறது. இதனால் இந்தத் துறை ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பள்ளிகள் அல்லது பராமரிப்பு மையங்கள் போன்ற நிறுவனங்களை மட்டும் குறிப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை.
"அதே நேரத்தில், அறிவுத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய பல கல்வி நிறுவனங்களும் எங்களிடம் உள்ளன, குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்" என்று அவர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.
அறிவுத் துறை முன்னேற்றுவதில் மாநிலத்தின் திட்டங்கள் குறித்து பத்தாங் காலி மாநில சட்டமன்ற உறுப்பினர் முஹைமின் ஹரித் அப்துல்லா சானியின் கூடுதல் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
2006 ஆம் ஆண்டு முதல், சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியைப் பிகேஎன்எஸ் வளாகத்தில் தொடங்கி இப்போது சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி என்று முத்திரை பதித்துள்ளது. இதில் வெளிநாட்டு வெளியீடுகளும் அடங்கும்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தேசிய புத்தக விருது, 2023 மூலம் தேசிய புத்தகத்தின் வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் சிறந்த இளம் தலைமைத்துவத்திற்கான பிரீமியர் விருதையும் அமிருடின் பெற்றார்.




