SELANGOR

தாமான் பண்டான் ஜெயாவில் நடைபெறும் ரெவாங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

23 பிப்ரவரி 2024, 9:19 AM
தாமான் பண்டான் ஜெயாவில் நடைபெறும் ரெவாங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், பிப் 23: நாளையும் ஞாயிற்றுக்கிழமையும் அம்பாங்கில் உள்ள பாடாங் அவாம், தாமான் பண்டான் ஜெயாவில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ரெவாங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டத்தோ மந்திரி புசார் பொதுமக்களை அழைக்கிறார்.

அதில் நாட்டுப்புற விளையாட்டுகள், ஃபுட்சல், கயிறு இழுத்தல் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"ரெவாங் நடவடிக்கைகள் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம் சம்பந்தப்பட்ட பேச்சு அமர்வில் குறிப்பாக அம்பாங் குடியிருப்பாளர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

"நாம் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்வோம்" என்று அவர் X  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாநிலம் முழுவதும் பல இடங்களில் இந்த ஆண்டு ரெவாங் திட்டத்தைச் செயல்படுத்த RM500,000 ஒதுக்கப்பட்டுள்ளது என கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா கூறினார்.

"ஒவ்வொரு திட்டத்திற்கும் RM70,000 முதல் RM100,000 வரை செலவாகும். இதற்குப் பிறகு நாங்கள் செலாயாங், சுபாங் ஜெயா மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்வோம். அவை பின்னர் பட்டியலிடப்படும்," என்று அவர் கூறினார்.

இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றால், சிலாங்கூரில் அடுக்குமாடி பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து வருடாந்திர நிகழ்வாக மாறும் என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.