SELANGOR

சிலாங்கூரில் 11 மில்லியன் மரங்களை நடும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது

19 பிப்ரவரி 2024, 3:50 AM
சிலாங்கூரில் 11 மில்லியன் மரங்களை நடும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கோலா லங்காட், பிப் 19: சிலாங்கூரில் 2026 ஆம் ஆண்டுக்குள் 11 மில்லியன் மரங்களை நடும் இலக்கை அடைவதற்கான முயற்சிகள் உள்ளூர் அதிகாரசபைகள் (PBT), மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிலாங்கூரில் பசுமையான பகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அவரது தரப்பு தற்போது தரவுகளைச் சேகரித்து மரம் நடும் பகுதிகளை அடையாளம் கண்டு வருவதாகச் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாங்கள் தரவைத் தொகுத்து, நடவு பிரிவு மற்றும் பல கூடுதல் திட்டங்களை மேற்கொள்வோம்.

"நாங்கள் தனியார் துறையுடன் கூடுதலான நிகழ்ச்சிகளை நடத்துவோம், எதிர்காலத்தில் பள்ளிகளையும் ஈடுபடுத்துவோம்" என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்க மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜமாலியா விளக்கினார்.

"2030 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூர் குறைந்த கார்பன் நகரமாக மாறுவதற்கான இலக்கை மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் தூய்மை இல்ல வாயு வெளியேற்றத்தை 45 சதவிகிதம் குறைக்கும் இலக்கையும் அடைவதற்கு இத்திட்டம் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள் 11 மில்லியன் மரங்களை நடும் திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் 400,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது

தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.